ஹதீஸ்கள்
#6947
ஸஹீஹ் அல்-புகாரீ - (Statements made under) Coercion
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவர் (தமக்குச் சொந்தமான) ஓர் அடிமையை தமது ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்துவிடுவதாக அறிவித்தார். அப்போது அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறெந்தச் செல்வமும் இருக்கவில்லை. இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை என்னிடமிருந்து விலைக்கு வாங்குபவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் பின் நஹ்ஹாம் (ரலி) அவர்கள் எண்ணூறு வெள்ளிக் காசுகள் (திர்ஹம்) கொடுத்து விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். அந்த கிப்தீ (எகிப்து) அடிமை (இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் ஆட்சியின்) முதலாவது ஆண்டில் இறந்துவிட்டான்.12 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد بن زيد، عن عمرو بن دينار، عن جابر رضى الله عنه ان رجلا، من الانصار دبر مملوكا، ولم يكن له مال غيره، فبلغ ذلك رسول الله صلى الله عليه وسلم فقال " من يشتريه مني ". فاشتراه نعيم بن النحام بثمانماية درهم. قال فسمعت جابرا يقول عبدا قبطيا مات عام اول
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- (Statements made under) Coercion
- Hadith Index
- #6947
- Book Index
- 8
Grades
- -
