ஹதீஸ்கள்
#6926
ஸஹீஹ் அல்-புகாரீ - Apostates
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, ‘அஸ்ஸாமு அலைக்க’ (உமக்கு மரணம் நேரட்டும்) எனக் கூறினான். அதற்கு (பதிலாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்றார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “அவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “அவன் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று சொன்னான்” என்றார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவனை நாங்கள் கொல்ல வேண்டாமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னால் (அதற்குப் பதிலாக) நீங்கள் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிடுங்கள்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل ابو الحسن، اخبرنا عبد الله، اخبرنا شعبة، عن هشام بن زيد بن انس بن مالك، قال سمعت انس بن مالك، يقول مر يهودي برسول الله صلى الله عليه وسلم فقال السام عليك. فقال رسول الله صلى الله عليه وسلم " وعليك ". فقال رسول الله صلى الله عليه وسلم " اتدرون ما يقول قال السام عليك ". قالوا يا رسول الله الا نقتله قال " لا، اذا سلم عليكم اهل الكتاب فقولوا وعليكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Apostates
- Hadith Index
- #6926
- Book Index
- 8
Grades
- -
