ஹதீஸ்கள்
#6918
ஸஹீஹ் அல்-புகாரீ - Apostates
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி அடைந்தவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் “எங்களில் யார்தான் தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?” என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்குப் பொருள் அதுவன்று. (அது இணைகற்பிப்பதையே குறிக்கிறது.) நிச்சயமாக இணைகற்பிப்பதே மிகப்பெரும் அநியாயமாகும் என்று (அறிஞர்) லுக்மான் கூறியதை (குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில்) நீங்கள் செவியுறவில்லையா?3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Apostates
- Hadith Index
- #6918
- Book Index
- 1
Grades
- -