ஹதீஸ்கள்
#6911
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூதல்ஹா (ரலி) அவர்கள் எனது கையைப் பிடித்து அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன். அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்” என்றார்கள். அதன்படி நான் நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் “இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும் “இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை?” என்றோ நபியவர்கள் என்னிடம் கேட்டதில்லை.52 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6911
- Book Index
- 49
Grades
- -