ஹதீஸ்கள்
#6876
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு யூதன் ஒரு சிறுமியின் தலையை இரு கற்களுக்குடையே வைத்து நசுக்கி விட்டான். அச்சிறுமியிடம், “உன்னை இப்படிச் செய்தவர் யார்? இன்னாரா? இன்னாரா?” என்று (ஒவ்வொரு பெயராகச் சொல்லிக்) கேட்கப்பட்டது. இறுதியில் அந்த யூதனுடைய பெயர் சொல்லப்பட்டது. (அச்சிறுமி ‘ஆம்’ என்று ஒப்புக்கொண்டாள்.) ஆகவே, அந்த யூதன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். அவன் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்வரை அவனிடம் விசாரித்துக்கொண்டே இருந்தார்கள். (அவன் ஒப்புக்கொண்டவுடன்) அவனது தலை கல்லால் நசுக்கப்பட்டது.14 அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا همام، عن قتادة، عن انس بن مالك رضى الله عنه ان يهوديا، رض راس جارية بين حجرين، فقيل لها من فعل بك هذا افلان او فلان حتى سمي اليهودي، فاتي به النبي صلى الله عليه وسلم فلم يزل به حتى اقر به، فرض راسه بالحجارة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6876
- Book Index
- 15
Grades
- -
