ஹதீஸ்கள்
#6872
ஸஹீஹ் அல்-புகாரீ - Blood Money
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஜுஹைனா’ குலத்தைச் சேர்ந்த ‘ஹுரக்கா’ எனும் கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச்சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டோம். அப்போது அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னார். ஆகவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கிக்கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவர்மீது பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “உசாமா! ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று கேட்டார்கள். நான், “அவர் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் (அவ்வாறு கூறினார்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீ கொன்றாய்?” என்று திரும்பத்திரும்ப (அதிருப்தியுடன்) என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். எந்த அளவுக் கென்றால், அதற்கு முன்னால் நான் இஸ்லாத்தைத் தழுவாமல் (இந்நிகழ்ச்சி நடந்த பின்னால் இஸ்லாத்தைத் தழுவி) இருந்தால் நன்றாயிருந்திருக்குமே! என்று ஆசைப்பட்டேன்.10 அத்தியாயம் :
حدثنا عمرو بن زرارة، حدثنا هشيم، حدثنا حصين، حدثنا ابو ظبيان، قال سمعت اسامة بن زيد بن حارثة رضى الله عنهما يحدث قال بعثنا رسول الله صلى الله عليه وسلم الى الحرقة من جهينة قال فصبحنا القوم فهزمناهم قال ولحقت انا ورجل من الانصار رجلا منهم قال فلما غشيناه قال لا اله الا الله قال فكف عنه الانصاري، فطعنته برمحي حتى قتلته قال فلما قدمنا بلغ ذلك النبي صلى الله عليه وسلم قال فقال لي " يا اسامة اقتلته بعد ما قال لا اله الا الله ". قال قلت يا رسول الله انما كان متعوذا. قال " اقتلته بعد ان قال لا اله الا الله ". قال فما زال يكررها على حتى تمنيت اني لم اكن اسلمت قبل ذلك اليوم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Blood Money
- Hadith Index
- #6872
- Book Index
- 11
Grades
- -
