ஹதீஸ்கள்
#6854
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது.- நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்துகொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், “இவளை நான் என்னிடமே (மனைவி யாக) வைத்துக்கொண்டிருந்தால் நான் இவள்மீது சொன்ன குற்றச்சாட்டு பொய் யாகிவிடும்” என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) “அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால், அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்” என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன். பிறகு, ‘அந்தப் பெண் அருவருக்கத் தக்க தோற்றத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்’ என்றும் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.67 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، قال الزهري عن سهل بن سعد، قال شهدت المتلاعنين وانا ابن خمس، عشرة، فرق بينهما فقال زوجها كذبت عليها ان امسكتها. قال فحفظت ذاك من الزهري " ان جاءت به كذا وكذا فهو، وان جاءت به كذا وكذا كانه وحرة فهو ". وسمعت الزهري يقول جاءت به للذي يكره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6854
- Book Index
- 76
Grades
- -
