ஹதீஸ்கள்
#6851
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர்நோன்பு நோற்க வேண்டாமென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்óம்களில் சிலர், “அவ்வாறாயின், நீங்கள் தொடர்நோன்பு நோற்கின்றீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்” என்று சொன்னார்கள். தொடர்நோன்பிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது ஒருநாள் தொடர்நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர்நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர்நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தி யிருப்பேன்” என்று -மக்கள் தொடர் நோன்பிóருந்து விலகிக்கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில்- கூறினார்கள்.64 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6851
- Book Index
- 73
Grades
- -