ஹதீஸ்கள்
#6840
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்” என்று சொன்னார்கள். நான் (குர்ஆனின் 24ஆவது அத்தியாயமான) ‘அந்நூர்’ அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா? அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.54 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில் (‘அந்நூர் அத்தியாயம்’ என்பதற்குப் பதிலாக) ‘அல்மாயிதா அத்தியாயம்’ என்று இடம்பெற்றுள்ளது. (அந்நூர் அத்தியாயம் எனும்) முதல் அறிவிப்பே சரியானதாகும். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا عبد الواحد، حدثنا الشيباني، سالت عبد الله بن ابي اوفى عن الرجم، فقال رجم النبي صلى الله عليه وسلم. فقلت اقبل النور ام بعده قال لا ادري. تابعه علي بن مسهر وخالد بن عبد الله والمحاربي وعبيدة بن حميد عن الشيباني. وقال بعضهم المايدة. والاول اصح
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6840
- Book Index
- 63
Grades
- -
