ஹதீஸ்கள்
#6808
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கை) அதிகமாவதும் ‘மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும்’; அல்லது ‘இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது’. அத்தியாயம் :
اخبرنا داود بن شبيب، حدثنا همام، عن قتادة، اخبرنا انس، قال لاحدثنكم حديثا لا يحدثكموه احد بعدي، سمعته من النبي صلى الله عليه وسلم سمعت النبي صلى الله عليه وسلم يقول " لا تقوم الساعة واما قال من اشراط الساعة ان يرفع العلم ويظهر الجهل، ويشرب الخمر، ويظهر الزنا، ويقل الرجال، ويكثر النساء، حتى يكون للخمسين امراة القيم الواحد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6808
- Book Index
- 37
Grades
- -
