ஹதீஸ்கள்
#6806
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதிமிக்க ஆட்சியாளர். 2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞர். 3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதர். 4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதய முடையவர். 5. இறைவழியில் நட்பு கொண்ட இருவர். 6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோதும் ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று கூறியவர். 7. தமது இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.24 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6806
- Book Index
- 35
Grades
- -