ஹதீஸ்கள்
#6801
ஸஹீஹ் அல்-புகாரீ - Legal Punishments
உபாதா பின் அஸ்ஸாமித்(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி அளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களி டையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயóலும் எனக்கு மாறு செய்வதில்லை” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கு கின்றேன். உங்களில் எவர் (இவற்றை) நிறைவேற்றுகிறாரோ அவரது பிரதிபலன் அல்லாஹ்விடத்தில் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக்கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.19 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்: கை வெட்டப்பட்டதற்குப்பின் திருடன் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திவிட்டால், அவனது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறே குற்றவியல் தண்டனைகள் பெற்ற அனைவரும்; அதைச் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கோரி திருந்தி விட்டால் அவர்களது சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Legal Punishments
- Hadith Index
- #6801
- Book Index
- 30
Grades
- -