ஹதீஸ்கள்
#6734
ஸஹீஹ் அல்-புகாரீ - Laws of Inheritance
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் யமன் நாட்டுக்கு எங்களின் போதக ராகவும் ஆட்சியாளராகவும் வந்தார்கள். அன்னாரிடம் நாங்கள், தம் மகளையும் சகோதரியையும் விட்டுவிட்டு இறந்துபோன ஒருவரைக் குறித்து (பாகப்பிரிவினை தொடர்பாக)க் கேட்டோம். அப்போது அவர்கள் (மொத்தச் சொத்தில்) மகளுக்குப் பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் அளிக்கும்படி கூறினார்கள். அத்தியாயம் :
حدثني محمود، حدثنا ابو النضر، حدثنا ابو معاوية، شيبان عن اشعث، عن الاسود بن يزيد، قال اتانا معاذ بن جبل باليمن معلما واميرا، فسالناه عن رجل، توفي وترك ابنته واخته، فاعطى الابنة النصف والاخت النصف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Laws of Inheritance
- Hadith Index
- #6734
- Book Index
- 11
Grades
- -
