ஹதீஸ்கள்
#6678
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப ஊர்தி ஒட்டகம் கேட்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது” என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள். பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘அல்லாஹ்வின் தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71 அத்தியாயம் :
حدثني محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، قال ارسلني اصحابي الى النبي صلى الله عليه وسلم اساله الحملان فقال " والله لا احملكم على شىء ". ووافقته وهو غضبان فلما اتيته قال " انطلق الى اصحابك فقل ان الله او ان رسول الله صلى الله عليه وسلم يحملكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6678
- Book Index
- 55
Grades
- -
