ஹதீஸ்கள்
#6652
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன்மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன்மூலம் அவர் நரக நெருப்பில் வேதûனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறைநம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இதை ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا وهيب، عن ايوب، عن ابي قلابة، عن ثابت بن الضحاك، قال قال النبي صلى الله عليه وسلم " من حلف بغير ملة الاسلام فهو كما قال قال ومن قتل نفسه بشىء عذب به في نار جهنم، ولعن المومن كقتله، ومن رمى مومنا بكفر فهو كقتله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6652
- Book Index
- 31
Grades
- -
