ஹதீஸ்கள்
#6639
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), “நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர், “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்று கூறினார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர் களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பவதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள்) அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப் பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن عبد الرحمن الاعرج، عن ابي هريرة، قال رسول الله صلى الله عليه وسلم " قال سليمان لاطوفن الليلة على تسعين امراة، كلهن تاتي بفارس يجاهد في سبيل الله. فقال له صاحبه ان شاء الله. فلم يقل ان شاء الله. فطاف عليهن جميعا، فلم تحمل منهن الا امراة واحدة، جاءت بشق رجل، وايم الذي نفس محمد بيده لو قال ان شاء الله. لجاهدوا في سبيل الله فرسانا اجمعون
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6639
- Book Index
- 18
Grades
- -
