ஹதீஸ்கள்
#6622
ஸஹீஹ் அல்-புகாரீ - Oaths and Vows
அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அப்துர் ரஹ்மான் பின் சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீராக (ஆசைப்பட்டு)க் கேட்காதீர்! ஏனெனில், (நீர்) கேட்டதால் அது உமக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீர் (தனிமையில்) விடப்படுவீர். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உமக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உமக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீர் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீர் கருதினால் உமது சத்தியத்(தை முறித்துவிட்டு, முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடுவீராக!. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துவீராக!” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Oaths and Vows
- Hadith Index
- #6622
- Book Index
- 2
Grades
- -