ஹதீஸ்கள்
#6618
ஸஹீஹ் அல்-புகாரீ - Divine Will
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்னு ஸய்யாதிடம் நபி (ஸல்) அவர்கள், “நான் (உன்னைச் சோதிப்ப தற்காக) ஒன்றை மனத்தில் மறைத்து வைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்)” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அத்துகான்’ எனும் 44ஆவது அத்தியாயத்தின் 10ஆவது வசனத்தை மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், “(அது) ‘அத்துக்’ என்றான். உடனே நபி (ஸல்) அவர்கள் “தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்று சொன்னார்கள். (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவனைக் கொன்றுவிட எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவனை விட்டுவிடுங்கள். இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால், இவனை நீங்கள் கொல்ல முடியாது. (ஏனெனில், இவனைக் கொல்ல வேறொருவர்-நபி ஈசா-வருவார் என்பது இறைவனின் ஏற்பாடு.) இவன் அவனாக இல்லையாயின், இவனைக் கொல்வதில் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை” என்று கூறினார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن حفص، وبشر بن محمد، قالا اخبرنا عبد الله، اخبرنا معمر، عن الزهري، عن سالم، عن ابن عمر رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم لابن صياد " خبات لك خبييا ". قال الدخ. قال " اخسا فلن تعدو قدرك ". قال عمر ايذن لي فاضرب عنقه. قال " دعه، ان يكن هو فلا تطيقه، وان لم يكن هو فلا خير لك في قتله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divine Will
- Hadith Index
- #6618
- Book Index
- 24
Grades
- -
