ஹதீஸ்கள்
#6604
ஸஹீஹ் அல்-புகாரீ - Divine Will
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) எங்களிடையே நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அந்த உரையில், மறுமை ஏற்படும்வரையிலான எந்தத் தகவலையும் அவர்கள் குறிப்பிடாமல் விட வில்லை. அதனை அறிந்தவர்கள் அறிந்துகொண்டார்கள். அதனை அறியாதவர்கள் அறியாமலானார்கள். (அதில்) ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை (நேரில்) காணும்போது அறிந்துகொள்வேன்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divine Will
- Hadith Index
- #6604
- Book Index
- 10
Grades
- -