ஹதீஸ்கள்
#6602
ஸஹீஹ் அல்-புகாரீ - Divine Will
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவரின் தூதுவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது சஅத் பின் உபாதா (ரலி), உபை பின் கஅப் (ரலி), முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தனர். அந்தப் புதல்வியாரின் மகன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பதாகத் தூதுவர் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் ஒரு தவணை உண்டு. ஆகவே, பொறுமையைக் கடைப்பிடித்து நன்மையை எதிர் பார்ப்பாயாக” என்று தம் புதல்விக்குச் சொல்லி அனுப்பினார்கள்.12 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا اسراييل، عن عاصم، عن ابي عثمان، عن اسامة، قال كنت عند النبي صلى الله عليه وسلم اذ جاءه رسول احدى بناته وعنده سعد وابى بن كعب ومعاذ ان ابنها يجود بنفسه. فبعث اليها " لله ما اخذ، ولله ما اعطى، كل باجل، فلتصبر ولتحتسب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divine Will
- Hadith Index
- #6602
- Book Index
- 8
Grades
- -
