ஹதீஸ்கள்
#6595
ஸஹீஹ் அல்-புகாரீ - Divine Will
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், (தாயின்) கருப்பையில் ஒரு வானவரை நியமிக்கின்றான். அவர், “இறைவா! (இது ஒரு துளி) விந்து. இறைவா! (இது பற்றித் தொங்கும்) கருக்கட்டி. இறைவா! (இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு” என்று கூறிக்கொண்டிருப்பார். அதன் படைப்பை முழுமையாக்கிட அல்லாஹ் விரும்பும்போது, “இறைவா! இது ஆணா? அல்லது பெண்ணா? நற்பேறு பெற்றதா? அல்லது நற்பேறு அற்றதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? ஆயுள் எவ்வளவு?” என்று வானவர் கேட்பார். அவ்வாறே (இவையனைத்தும் அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டு,) அது தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே எழுதப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن عبيد الله بن ابي بكر بن انس، عن انس بن مالك رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " وكل الله بالرحم ملكا فيقول اى رب نطفة، اى رب علقة، اى رب مضغة. فاذا اراد الله ان يقضي خلقها قال اى رب ذكر ام انثى اشقي ام سعيد فما الرزق فما الاجل فيكتب كذلك في بطن امه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Divine Will
- Hadith Index
- #6595
- Book Index
- 2
Grades
- -
