ஹதீஸ்கள்
#6560
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டபின் அல்லாஹ், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெறியேற்றி விடுங்கள்” என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெறியேறு வார்கள். அப்போது அவர்கள் கரிக்கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் ‘சேற்று வெள்ளத்தில்’ அல்லது ‘வெள்ளத்தின் கறுப்புக் களிமண்ணில்’ விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா? இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136 அத்தியாயம் :
حدثنا موسى، حدثنا وهيب، حدثنا عمرو بن يحيى، عن ابيه، عن ابي سعيد الخدري رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم قال " اذا دخل اهل الجنة الجنة، واهل النار النار يقول الله من كان في قلبه مثقال حبة من خردل من ايمان فاخرجوه. فيخرجون قد امتحشوا وعادوا حمما، فيلقون في نهر الحياة، فينبتون كما تنبت الحبة في حميل السيل او قال حمية السيل ". وقال النبي صلى الله عليه وسلم " الم تروا انها تنبت صفراء ملتوية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6560
- Book Index
- 149
Grades
- -
