ஹதீஸ்கள்
#6557
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படு பவரிடம், “பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன்மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ், “நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை-எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதை-த்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணைகற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!” என்று கூறுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن ابي عمران، قال سمعت انس بن مالك رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يقول الله تعالى لاهون اهل النار عذابا يوم القيامة لو ان لك ما في الارض من شىء اكنت تفتدي به فيقول نعم. فيقول اردت منك اهون من هذا وانت في صلب ادم ان لا تشرك بي شييا فابيت الا ان تشرك بي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6557
- Book Index
- 146
Grades
- -
