ஹதீஸ்கள்
#6554
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். -அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை- அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழுநிலவின் வடிவத்தில் இருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.132 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا عبد العزيز، عن ابي حازم، عن سهل بن سعد، ان رسول الله صلى الله عليه وسلم قال " ليدخلن الجنة من امتي سبعون او سبعماية الف لا يدري ابو حازم ايهما قال متماسكون، اخذ بعضهم بعضا، لا يدخل اولهم حتى يدخل اخرهم، وجوههم على صورة القمر ليلة البدر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6554
- Book Index
- 143
Grades
- -
