ஹதீஸ்கள்
#6523
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! (25:34ஆவது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கவைத்த (இறை)வனுக்கு, மறுமை நாளில் அவனை அவனது முகத்தால் நடக்கவைத்திட முடியாதா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். (இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், “ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வல்லமையின் மீதாணையாக!” என்று சொன்னார்கள்.108 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا يونس بن محمد البغدادي، حدثنا شيبان، عن قتادة، حدثنا انس بن مالك رضى الله عنه ان رجلا، قال يا نبي الله كيف يحشر الكافر على وجهه قال " اليس الذي امشاه على الرجلين في الدنيا قادرا على ان يمشيه على وجهه يوم القيامة ". قال قتادة بلى وعزة ربنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6523
- Book Index
- 112
Grades
- -
