ஹதீஸ்கள்
#6517
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரண்டு பேர் சச்சரவிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம்; மற்றொருவர் யூதர். அந்த முஸ்லிம் (தாம் செய்த ஒரு சத்தியத்தின்போது) “அகிலத்தார் அனைவரையும்விட முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவ ராக)த் தேர்ந்தெடுத்துக்கொண்டவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், “அகிலத்தார் அனைவரையும்விட மூசா (அலை) அவர்களை (சிறந்தவ ராக)த் தேர்ந்தெடுத்துக்கொண்டவன் மீதாணையாக!” என்று கூறினார். இதைக் கேட்ட அந்த முஸ்லிம் கோபமடைந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம் நடவடிக்கையையும் அந்த முஸ்லிமின் நடவடிக்கையையும் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசா (அலை) அவர்களைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது நான்தான் மயக்கம் தெளிந்து எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா (அலை) அவர்கள் இறைவனது அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மூசா எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து (எழுந்து)விட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.101 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني عبد العزيز بن عبد الله، قال حدثني ابراهيم بن سعد، عن ابن شهاب، عن ابي سلمة بن عبد الرحمن، والاعرج، انهما حدثاه ان ابا هريرة قال استب رجلان، رجل من المسلمين ورجل من اليهود فقال المسلم والذي اصطفى محمدا على العالمين. فقال اليهودي والذي اصطفى موسى على العالمين، قال فغضب المسلم عند ذلك، فلطم وجه اليهودي، فذهب اليهودي الى رسول الله صلى الله عليه وسلم فاخبره بما كان من امره وامر المسلم فقال رسول الله صلى الله عليه وسلم " لا تخيروني على موسى، فان الناس يصعقون يوم القيامة، فاكون في اول من يفيق، فاذا موسى باطش بجانب العرش، فلا ادري اكان موسى فيمن صعق فافاق قبلي، او كان ممن استثنى الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6517
- Book Index
- 106
Grades
- -
