ஹதீஸ்கள்
#6510
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோய்வாய்ப்பட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘தோல் பாத்திரம் ஒன்று’ அல்லது ‘பெரிய மரக் குவளையொன்று’ இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது. அவர்கள் தம் இரு கைகளையும் அந்தத் தண்ணீருக்குள் நுழைத்து முகத்தில் தடவிக்கொண்டே “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு” என்று கூறினார்கள். பிறகு தமது கையை உயர்த்தியவாறு “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” எனப் பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.96 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘உல்பா’ என்பது மரப் பாத்திரத்தையும், ‘ரக்வா’ என்பது தோல் பாத்திரத்தையும் குறிக்கும். அத்தியாயம் :
حدثني محمد بن عبيد بن ميمون، حدثنا عيسى بن يونس، عن عمر بن سعيد، قال اخبرني ابن ابي مليكة، ان ابا عمرو، ذكوان مولى عايشة اخبره ان عايشة رضى الله عنها كانت تقول ان رسول الله صلى الله عليه وسلم كان بين يديه ركوة او علبة فيها ماء، يشك عمر فجعل يدخل يديه في الماء، فيمسح بهما وجهه ويقول " لا اله الا الله، ان للموت سكرات ". ثم نصب يده فجعل يقول " في الرفيق الاعلى ". حتى قبض ومالت يده. قال ابو عبد الله العلبة من الخشب والركوة من الادم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6510
- Book Index
- 99
Grades
- -
