ஹதீஸ்கள்
#6509
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஆரோக்கியமாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, தமது தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பிறகு, “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொன்னார்கள். நான், “அவர்கள் இப்போது நம்முடன் இருப்பதைத் தேர்ந்தெடுக்க வில்லை (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டார்கள்)” என்று (மனத்துக்குள்) கூறிக்கொண்டேன். (அவர்கள் ஆரோக்கியமாக இருந்த போது, ‘இறைத்தூதர்கள் இறக்கும்முன் இம்மை மறுமை இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப் படுவார்கள்’ என்று) நம்மிடம் அவர்கள் கூறிய சொல் இதுதான் என நான் அறிந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, ‘இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)’ என்பதாகவே இருந்தது. இதை அறிஞர்கள் பலர் இருந்த அவையில் உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.94 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6509
- Book Index
- 98
Grades
- -