ஹதீஸ்கள்
#6507
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்” என்று கூறினார்கள். அப்போது ‘ஆயிஷா (ரலி) அவர்கள்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்’ “நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவர்மீது அல்லாஹ் அன்பு கொண்டிருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்துஉபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள்பாலி)ப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட் டுள்ளது. அத்தியாயம் :
حدثنا حجاج، حدثنا همام، حدثنا قتادة، عن انس، عن عبادة بن الصامت، عن النبي صلى الله عليه وسلم قال " من احب لقاء الله احب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه ". قالت عايشة او بعض ازواجه انا لنكره الموت. قال " ليس ذاك، ولكن المومن اذا حضره الموت بشر برضوان الله وكرامته، فليس شىء احب اليه مما امامه، فاحب لقاء الله واحب الله لقاءه، وان الكافر اذا حضر بشر بعذاب الله وعقوبته، فليس شىء اكره اليه مما امامه، كره لقاء الله وكره الله لقاءه ". اختصره ابو داود وعمرو عن شعبة. وقال سعيد عن قتادة عن زرارة عن سعد عن عايشة عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6507
- Book Index
- 96
Grades
- -
