ஹதீஸ்கள்
#6506
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது.93 இரண்டு பேர் (விற்பனைக்காகத்) துணியை விரித்து(ப் பார்த்து)க்கொண்டி ருப்பார்கள். அதை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்கவுமாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும், ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி(ல் பால்கறந்து அப்போதுதா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகிக்கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். ஒருவர் தமது நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். உங்களில் ஒருவர் தமது உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டுசென்றிருப்பார்; அதை உண்டிருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن عبد الرحمن، عن ابي هريرة، رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها، فاذا طلعت فراها الناس امنوا اجمعون، فذلك حين لا ينفع نفسا ايمانها، لم تكن امنت من قبل، او كسبت في ايمانها خيرا، ولتقومن الساعة وقد نشر الرجلان ثوبهما بينهما فلا يتبايعانه ولا يطويانه، ولتقومن الساعة وقد انصرف الرجل بلبن لقحته فلا يطعمه، ولتقومن الساعة وهو يليط حوضه فلا يسقي فيه، ولتقومن الساعة وقد رفع اكلته الى فيه فلا يطعمها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6506
- Book Index
- 95
Grades
- -
