ஹதீஸ்கள்
#6500
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன். எனக்கும் நபியவர்களுக்கும் இடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக்கட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. (அந்த அளவுக்கு நெருக்கத்தில் நான் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் ‘முஆதே!’ என்றார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ‘முஆத் பின் ஜபலே!’ என அழைத்தார்கள். நான் (அப்போதும்), “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா!” என்று கேட்டார் கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதனையும் (எவரையும்) இணையாக்கக் கூடாது” என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் ‘முஆத் பின் ஜபலே!’ என்று அழைத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள் அதை நிறைவேற்றினால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். “அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்றால், அவர்களை அவன் (மறுமையில்) வேதனைசெய்யாமல் இருப்பதாகும்” என்று சொன்னார்கள்.89 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6500
- Book Index
- 89
Grades
- -