ஹதீஸ்கள்
#6480
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தாம் செய்துவந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக (இறக்கும் தறுவாயில்) தம் வீட்டாரிடம், “நான் இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவளிக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்” என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவருடைய வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரது உடலை ஒன்றுதிரட்டியபின் “நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான். அவர் “உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது” என்று பதிலளித் தார். ஆகவே, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6480
- Book Index
- 69
Grades
- -