ஹதீஸ்கள்
#6476
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அபூஷுரைஹ் அல்அதவீ அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியுற்றன; என் உள்ளம் அதை மனனமிட்டது: விருந்தோம்பல் மூன்று நாட்களாகும். (அவற்றில்) அவருடைய கொடையும் அடங்கும். அப்போது “அவருடைய கொடை என்ன?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (விருந்தோம்பல்) ஆகும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள்.64 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6476
- Book Index
- 65
Grades
- -