ஹதீஸ்கள்
#6467
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(வணக்க வழிபாடுகளிலும் நற்செயல்கள் புரிவதிலும்) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறாதீர்கள். நற்செயல் சிறிதே ஆயினும் அதற்குரிய பிரதிபலன் இறைவனிடம் கிடைக்கும் என்ற) நற்செய்தி பெறுங்கள். ஏனெனில், (இறையருள் இல்லாவிட்டால்) யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் நுழைத்துவிடாது” என்று கூறினார்கள். மக்கள் “தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவினார்கள். என்னையும்தான்; மன்னிப்பாலும் கருணையாலும் என்னை அல்லாஹ் அரவணைத்துக்கொண்டால் தவிர” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் “நேர்மையோடு செயல்படுங்கள்; நற்செய்தி பெறுங்கள்” என்று இடம்பெற்றுள்ளது. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நேர்மை (அல்லது நடுநிலை) என்பதற்கு ‘வாய்மை’ என்பது இங்கு பொருளாகும். இதை (அரபியில்) ‘சதீத்’ மற்றும் ‘சதாத்’ என்பர். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا محمد بن الزبرقان، حدثنا موسى بن عقبة، عن ابي سلمة بن عبد الرحمن، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم قال " سددوا وقاربوا، وابشروا، فانه لا يدخل احدا الجنة عمله ". قالوا ولا، انت يا رسول الله قال " ولا انا الا ان يتغمدني الله بمغفرة ورحمة ". قال اظنه عن ابي النضر عن ابي سلمة عن عايشة. وقال عفان حدثنا وهيب، عن موسى بن عقبة، قال سمعت ابا سلمة، عن عايشة، عن النبي صلى الله عليه وسلم " سددوا وابشروا ". وقال مجاهد {قولا سديدا} وسدادا صدقا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6467
- Book Index
- 56
Grades
- -
