ஹதீஸ்கள்
#6461
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது எது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “நிரந்தரமாகச் செய்யப்படும் செயல்” என்று விடையளித்தார்கள். “(இரவில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) எப்போது எழுவார்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “சேவல் கூவும்போது (நடுநிசி நேரம்) எழு(ந்து தொழு)வார்கள்” என்று விடையளித்தார்கள்.47 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا ابي، عن شعبة، عن اشعث، قال سمعت ابي قال، سمعت مسروقا، قال سالت عايشة رضى الله عنها اى العمل كان احب الى النبي صلى الله عليه وسلم قالت الدايم. قال قلت فاى حين كان يقوم قالت كان يقوم اذا سمع الصارخ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6461
- Book Index
- 50
Grades
- -
