ஹதீஸ்கள்
#6448
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (உடல் நலமில்லாதிருந்த) கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை நாங்கள் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலன் அளிப்பது உயர்ந்தோனான அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்றுவிட்டனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் போர் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடு போட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். (அதன் மூலம் அவருக்கு ‘கஃபன்’ அணிவிக்க) அவரது தலையை நாங்கள் மறைத்தபோது அவருடைய கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய கால்களை நாங்கள் மறைத்தபோது அவரது தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலையை (அத்துணியால்) மறைத்துவிட்டு அவருடைய கால்கள்மீது ‘இத்கிர்’ புல்லையிடுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க்கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.38 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6448
- Book Index
- 37
Grades
- -