ஹதீஸ்கள்
#6442
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் “உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விடத் தம்முடைய வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தைவிட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்குமுன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அதுதான் அவரது செல்வமாகும். (இறக்கும்போது) எதை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.31 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6442
- Book Index
- 31
Grades
- -