ஹதீஸ்கள்
#6437
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந் தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய கண்ணை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வாசகம் திருக்குர்ஆனில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்கா விலுள்ள) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு கூறக் கேட்டுள்ளேன். அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا مخلد، اخبرنا ابن جريج، قال سمعت عطاء، يقول سمعت ابن عباس، يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " لو ان لابن ادم مثل واد مالا لاحب ان له اليه مثله، ولا يملا عين ابن ادم الا التراب، ويتوب الله على من تاب ". قال ابن عباس فلا ادري من القران هو ام لا. قال وسمعت ابن الزبير يقول ذلك على المنبر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6437
- Book Index
- 26
Grades
- -
