ஹதீஸ்கள்
#6433
ஸஹீஹ் அல்-புகாரீ - To make the Heart Tender
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மதீனாவிலுள்ள) ‘மகாயித்’ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு “நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “யார் இதைப் போன்று (முழுமையாக) அங்கத் தூய்மை செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி)விடாதீர்கள்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.25 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- To make the Heart Tender
- Hadith Index
- #6433
- Book Index
- 22
Grades
- -