ஹதீஸ்கள்
#6395
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ‘அஸ்ஸாமு அலைக்கும்’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி) முகமன் கூறிவந்தார்கள். அவர்கள் கூறியதைப் புரிந்துக்கொண்ட நான், “அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா (மரணமும் சாபமும் உங்களுக்கே உண்டாகட்டும்)” என்று பதில் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொல்வதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அ(வர்கள் சொன்ன)தையே அவர்களுக்கு நான் பதிலாகக் கூறியதை நீ செவியுறவில்லையா? நான் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கும் ஆகட்டும்) என்று (நளினமாய்) குறிப்பிட்டேனே?” என்று சொன்னார்கள்.79 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6395
- Book Index
- 90
Grades
- -