ஹதீஸ்கள்
#6394
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை (நஜ்தை நோக்கி மார்க்கப் பிரசாரத்திற்காக) அனுப்பிவைத்தார்கள். அவர்களுக்கு ‘குர்ரா’ (குர்ஆன் அறிஞர்கள்) என்று கூறப்படும். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கவலைப்பட்டதைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் கவலைப்பட்டதை நான் பார்த்ததில்லை. ஆகவே, ஒரு மாதம் ஃபஜ்ர் தொழுகையில் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதிப் பிரார்த்தித்தார்கள். மேலும், “உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்” என்றும் சொன்னார்கள்.78 அத்தியாயம் :
حدثنا الحسن بن الربيع، حدثنا ابو الاحوص، عن عاصم، عن انس رضى الله عنه قال بعث النبي صلى الله عليه وسلم سرية يقال لهم القراء فاصيبوا، فما رايت النبي صلى الله عليه وسلم وجد على شىء ما وجد عليهم، فقنت شهرا في صلاة الفجر ويقول " ان عصية عصوا الله ورسوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6394
- Book Index
- 89
Grades
- -
