ஹதீஸ்கள்
#6386
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடை)மீது (வாசனைத் திரவியத்தின்) மஞ்சள் நிற அடை யாளத்தை நபி (ஸல்) அவர்கள் கண்ட போது ‘விஷயம் என்ன?’ அல்லது ‘என்ன (இது)?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ‘ஒரு பேரீச்சங்கொட்டை எடையளவு தங்கத்தை (மணக்கொடையாக)க் கொடுத்து ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “பாரகல்லாஹு லக்க” (அல்லாஹ் உங்களுக்கு வளம் வழங்குவானாக!) என்று பிரார்த்தித்துவிட்டு, “ஓர் ஆட்டை யாவது (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளியுங்கள்” என்று கூறினார்கள்.67 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6386
- Book Index
- 81
Grades
- -