ஹதீஸ்கள்
#6337
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் ஒருமுறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள். (அது போதாது எனக் கருதி) அதற்கு நீங்கள் மறுத்தால் (வாரத்தில்) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள். அதைவிட அதிகமாகப்போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள். (அதைவிட அதிகமாகப்போய்) இந்த குர்ஆன்மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்தி விடாதீர்கள். மக்கள் எதையோ பேசிக்கொண்டிருக் கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற, அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட, அதனால், அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கின்ற நிலையில் உங்களை நான் காணக் கூடாது. மாறாக, நீங்கள் (அப்போது) மௌனமாக இருங்கள். அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக்கொண்டால் அவர்களிடையே உரையாற்றுங்கள். எதுகைமோனையுடன் பிரார்த்திப் பதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக் கவே நான் கண்டுள்ளேன். அத்தியாயம் :
حدثنا يحيى بن محمد بن السكن، حدثنا حبان بن هلال ابو حبيب، حدثنا هارون المقري، حدثنا الزبير بن الخريت، عن عكرمة، عن ابن عباس، قال حدث الناس، كل جمعة مرة، فان ابيت فمرتين، فان اكثرت فثلاث مرار ولا تمل الناس هذا القران، ولا الفينك تاتي القوم وهم في حديث من حديثهم فتقص عليهم، فتقطع عليهم حديثهم فتملهم، ولكن انصت، فاذا امروك فحدثهم وهم يشتهونه، فانظر السجع من الدعاء فاجتنبه، فاني عهدت رسول الله صلى الله عليه وسلم واصحابه لا يفعلون الا ذلك. يعني لا يفعلون الا ذلك الاجتناب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6337
- Book Index
- 34
Grades
- -
