ஹதீஸ்கள்
#6333
ஸஹீஹ் அல்-புகாரீ - Invocations
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம், “துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார் கள். துல்கலஸா என்பது, (அறியாமைக் காலத்திலிருந்த) ஒரு பலிபீடமாகும். அதை மக்கள் வழிபட்டுவந்தனர். அது ‘யமன் நாட்டு கஅபா’ என அழைக் கப்பட்டுவந்தது. நான், “அல்லாஹ்வின் தூதரே! குதிரையில் நான் சரியாக உட்கார முடியாதவனாக இருக்கிறேன்” என்று கூறினேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்துவிட்டு, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். இதையடுத்து என் சமுதாயத்தாரான ‘அஹ்மஸ்’ குலத்தாரில் ஐம்பது பேருடன் நான் (துல்கலஸா நோக்கிப்) புறப்பட்டேன். -(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினருடன் நான் நடந்தேன்” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் அறிவித்தார்கள்.- பிறகு, நான் ‘துல்கலஸா’ சென்று அந்த பலிபீடத்தை எரித்துவிட்டேன். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அ(ந்தப் பலிபீடத்)தைச் சிரங்குபிடித்த ஒட்டகத்தைப் போன்று ஆக்கிவிட்டுத்தான் தங்களிடம் நான் வந்துள்ளேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என்) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்காகவும் அவர்களின் குதிரைகளுக்காகவும் (வளம் வேண்டிப்) பிரார்த்தித் தார்கள்.25 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Invocations
- Hadith Index
- #6333
- Book Index
- 30
Grades
- -