ஹதீஸ்கள்
#6218
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள் இரவில்) நபி (ஸல்) அவர்கள் (திடீரென) விழித்தெழுந்து (பிரமிப்புடன்), “சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன். இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள்தான் என்ன? (இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட குழப்பங்கள்தான் என்ன? இந்த அறைகளில் உள்ள பெண்களை எழுப்பிவிடுகின்றவர் யார்? -தம் துணைவியர் குறித்தே இவ்வாறு கூறினார்கள்- அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமானவர்களாய் இருப்பார்கள்” என்று கூறினார்கள்.252 உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று (ஒரு சந்தர்ப் பத்தில்) கேட்டேன். அவர்கள், “இல்லை” என்று பதிலளித்தார்கள். நான் (ஆச்சரியப் பட்டவாறு) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன்.253 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6218
- Book Index
- 242
Grades
- -