ஹதீஸ்கள்
#6217
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (‘பகீஉல் ஃகர்கத்’ எனும் பொது மைய வாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் ஒரு தடியால் தரையைக் கீறிய வண்ணம் (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், “தமது இருப்பிடம் சொர்க்கமா, அல்லது நரகமா எனத் தீர்மானிக்கப்படாத எவரும் உங்களில் இல்லை” என்று கூறினார்கள். அப்போது மக்கள் (சிலர்), “நாங்கள் (இதையே) நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு “யார் (இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறாரோ அவர் (சொர்க்கத்தின்) நல்ல வழியில் செல்வதை நாம் எளிதாக்குவோம்” எனும் (92:5-7ஆகிய) வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.250 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6217
- Book Index
- 241
Grades
- -