ஹதீஸ்கள்
#6215
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நான் (என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அவர்களிடம் நபி (ஸல்) அவர்களும் இருந்தார்கள். ‘இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘அதில் சிறிது நேரம்’ ஆனபோது நபி (ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) அமர்ந்து வானத்தைப் பார்த்தவாறு “நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு சான்றுகள் பல உள்ளன” எனும் (3:190ஆவது) இறை வசனத்தை ஓதினார்கள்.248 அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، حدثنا محمد بن جعفر، قال اخبرني شريك، عن كريب، عن ابن عباس رضى الله عنهما قال بت في بيت ميمونة والنبي صلى الله عليه وسلم عندها، فلما كان ثلث الليل الاخر او بعضه قعد فنظر الى السماء فقرا {ان في خلق السموات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6215
- Book Index
- 239
Grades
- -
