ஹதீஸ்கள்
#6213
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல” என்று பதிலளித்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறா யின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மை யாகிவிடுகிறதே (அது எப்படி?)” என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த உண்மையான வார்த்தைகளை (வானவரிடமிருந்து) ஜின் ஒட்டுக்கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பதுபோல் போட்டுவிடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகின்றனர்” என்று கூறினார்கள்.244 அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، اخبرنا مخلد بن يزيد، اخبرنا ابن جريج، قال ابن شهاب اخبرني يحيى بن عروة، انه سمع عروة، يقول قالت عايشة سال اناس رسول الله صلى الله عليه وسلم عن الكهان فقال لهم رسول الله صلى الله عليه وسلم " ليسوا بشىء ". قالوا يا رسول الله فانهم يحدثون احيانا بالشىء يكون حقا. فقال رسول الله صلى الله عليه وسلم " تلك الكلمة من الحق يخطفها الجني، فيقرها في اذن وليه قر الدجاجة، فيخلطون فيها اكثر من ماية كذبة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6213
- Book Index
- 237
Grades
- -
