ஹதீஸ்கள்
#6211
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு ‘அன்ஜஷா’ எனப்படும் ‘பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்’ ஒருவர் இருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டவராக இருந்தார். (அவர் ஒருமுறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க பாடிக்கொண்டிருந்தபோது) அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அன்ஜஷா! நிதானம்! கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே!” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மென்மையான பெண்களைக் கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்கள் (கண்ணாடிக் குடுவைகள் என்று சிலேடையாகக்) கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا حبان، حدثنا همام، حدثنا قتادة، حدثنا انس بن مالك، قال كان للنبي صلى الله عليه وسلم حاد يقال له انجشة، وكان حسن الصوت، فقال له النبي صلى الله عليه وسلم " رويدك يا انجشة، لا تكسر القوارير ". قال قتادة يعني ضعفة النساء
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6211
- Book Index
- 235
Grades
- -
