ஹதீஸ்கள்
#6200
ஸஹீஹ் அல்-புகாரீ - Ethics
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி (‘குனூத்’ எனும் சிறப்புப் பிரார்த்தனையில் பின்வருமாறு) கூறினார்கள்: இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் மக்காவிóலுள்ள ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கை யாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும்பகை) கொண்ட முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்கு வாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப்போல் இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!227 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Ethics
- Hadith Index
- #6200
- Book Index
- 224
Grades
- -